News Just In

5/04/2021 08:19:00 AM

நேற்று ஒரே நாளில் 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 113676ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் நேற்று மட்டும் ஆயிரத்து 923 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா பாதிப்பாகப் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 10 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 676ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 967 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 98 ஆயிரத்து 209 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக இன்று 13 பேரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 709 ஆக அதிகரித்துள்ளது.

14 ஆயிரத்து 771 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை ஒன்பது இலட்சத்து 28 ஆயிரத்து 107 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை 96 ஆயிரத்து 871 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: