News Just In

5/26/2021 06:36:00 PM

மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- காத்தான்குடி பொலிஸ் அதிகாரிகள் 32 பேருக்கு கொரோனா...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 6 பேருக்கும், வாழைச்சேனை பிரதேசத்தில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 5 பேருக்கும், செங்கலடியில் 3 பேருக்கும், ஏறாவூரில் 13 பேருக்கும், பட்டிப்பளையில் 8 பேருக்கும், வவுணதீவில் 13 பேருக்கும், ஆரையம்பதியில் 2 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 6 பேருக்கும், பொலிஸ் அதிகாரிகள் 32 பேர் உட்பட மட்டக்களப்பில் இன்று மொத்தமாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: