News Just In

4/20/2021 04:09:00 PM

இணையத்தில் போலி செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக புதிய சட்டம்...!!


இணையதளத்தின் ஊடாக பொய்யானதும் திசை திருப்புவதுமான செயல்களுக்கு எதிரான சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காகப் பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்து, பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தினருக்கும் சரியான தகவல்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே, இந்த பணிக்கான சட்ட மூலத்தைத் தயாரிக்க, சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதி அமைச்சரும், வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: