News Just In

4/05/2021 07:30:00 PM

பாம் எண்ணெய் வகைகளின் இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்- ஜனாதிபதி உத்தரவு...!!


இலங்கைக்கு பாம் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவு வெளியாக்கப்படவுள்ளது.

அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: