News Just In

4/10/2021 12:04:00 PM

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட கொடுப்பனவு!!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த தரப்பினருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னதாக குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

No comments: