News Just In

4/03/2021 12:13:00 PM

பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன் - யாழில் பரபரப்பு!!


யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிசாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ். பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

வாய்த்தர்க்கம் தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

No comments: