News Just In

4/11/2021 09:56:00 PM

மட்டக்களப்பு- களுதாவளையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக நிகழ்வும் பீற்றூட் அறுவடையும்...!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சௌபாக்கியா விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக விழிபூட்டல் நிகழ்வும் பீற்றூட் அறுவடை விழாவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் சனிக்கிழமை(10) நடைபெற்றது.

களுதாவளை விவசாய போதானாசிரியர் பொ.சிறிபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், உதவி விவசாய பணிப்பாளர் ரி.மேகராஜா, களுதாவளை தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக விழிபூட்டல் நிகழ்வு இடம்பெற்றதோடு, களுதாவளையில் செய்கைபண்ணப்பட்டிருந்த பீற்றூட் அறுவடையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.















No comments: