News Just In

4/09/2021 02:47:00 PM

பாடசாலைக்குள் அடாத்தாக புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல்- யாழில் சம்பவம்!!


யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் அடாத்தாக புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று (09) காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற குறித்த குழுவைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஐந்து வரையான மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





No comments: