மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரியைகள் நேற்று 24.04.2021 ஆந் திகதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகின்ற இக்கிரியாகால நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்றுவருகின்றது.
ஆலய பிரதம குரு உட்பட கும்பாபிஷேக குருமார்களினால் பூஜைகள் நடாதப்படுவதுடன் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட செயலக உத்தியோகத்தர்களும் இப்பக்திமிகு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: