News Just In

4/16/2021 08:10:00 AM

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!


2.400 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஹேரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: