மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிலவ வருடத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ்விசேட பூசை வழிபாட்டினை மாவட்ட செயலக கணக்குக் கிளை மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின்
ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது.
விசேட பூசை வழிபாட்டினை மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக் குரு நடாத்தியிருந்ததுடன், பூசை வழிபாடுகளில் அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: