News Just In

4/12/2021 05:58:00 PM

மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு பொருட் கொள்வனவில் மக்கள் மிகுந்த ஆர்வம்...!!


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவதற்கு இம்மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இம்மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ,களுவாஞ்சிகுடி, ஏறாவூர்நகர் ,செங்கலடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய கேந்திர நிலையங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள்  மற்றும அத்தியாவசிய பொருட்கள் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் மிகுந்த ஆர்வம்காட்டியிருந்ததை இன்று காணக் கூடியதாக இருந்தது.

பொதுச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் கூடுதலாக புத்தாண்டு பொருள் கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலை மட்டக் களப்பு நகரிலும் பொதுச் சந்தையிலும் வர்த்தக நிலையங்கள் ஆடை விற்பனை நிலையங்களிலும் மக்கள் நிறைந்து பொருள் கொள்வனவில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்தது.










No comments: