News Just In

4/13/2021 06:56:00 PM

களுவாஞ்சிகுடியில் களை கட்டியுள்ள சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பிறக்கவிருக்கும் “பிலவ” எனும் தமிழ் சிங்களப் புத்தாண்டை மக்கள் கொண்டாடும் முகமாக பொருட்கள் மற்றும் புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதில் தற்போது அதிக மும்முரமாக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் தனித் தமிழ் மக்களைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படும் பட்டிருப்புத் தொகுதியின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்து வரும் களுவாஞ்சிகுடியில் மக்கள் திங்கட்கிழமை(12) பொருட் கொள்வனவுகளிலும், புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

கொரோனோ அச்சத்தின் மத்தியிலும், வியாபாரிகளும், பொதுமக்களும், சுகாதார நடைமுறைகளைக் கைக்கொண்டு, முகக்கவசம் அணிந்து செயற்படுகின்றனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிசார் பாதுகாப்பு கண்ணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.






No comments: