News Just In

4/15/2021 07:05:00 PM

காலநிலையில் திடீர் மாற்றம்- சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை...!!


இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கண்டி மாவட்டத்தின் உடுநுவர, தெல்தோட்டை, கங்கவத்தகோரல, யட்டிநுவர, தும்பானே, உடுதும்புர, தொலுவ, மெததும்பர மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்ககோரல மற்றும் ரத்தொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: