News Just In

4/16/2021 11:41:00 AM

ஆலயத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு!!


மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு புத்தசாசன கலாசார மற்றும் சமய விவகார அமைச்சரும், பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. ஜெயராஜி மற்றும் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவலோஜினி உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments: