News Just In

4/22/2021 08:05:00 AM

திருக்கோவிலில் பாடசாலைக்கு சென்ற 15 வயது மாணவியை காணவில்லை...!!


திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9ம் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்; தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயதுடைய சிறுமி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து மாiவைரை வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம்வாங்கிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகம்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருவருகின்றனர்.

No comments: