News Just In

3/18/2021 05:47:00 AM

மீன்பிடி படகை ஏற்றிச் சென்ற வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து!!


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாண்டியடி நேருபுரம் பொத்துவில் பிரதான வீதியில் ரிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொத்துவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுடே விபத்து ஏற்பட்டமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











No comments: