News Just In

3/18/2021 06:56:00 PM

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காயன்குடா கூமாச்சோலை பிரதேசத்தில் சேதன பசளைப் பயன்பாட்டினை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு!!


மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் காயன்குடா விவசாயப்போதனாசிரியர் பிரிவுக்கு உட்பட்ட கூமாச்சோலை பிரதேசத்தில் நெற் பயிரில் "சட்டிக்கலப்பை பயன்பாட்டின் மூலம் சேதன வளத்தைப் பேணல், ஏனைய சேதன பசளைப் பயன்பாட்டினை அதிகரித்தல் " தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு 16.03.2021 அன்று மிகவும் சிறப்பான முறையில் தொழெநுட்ப உதவியாளர் சு.துஷாந் தலைமையில் நடைபெற்றது.

இதில் வலயம் வடக்கிற்குரிய உதவி விவசாயப் பணிப்பாளர் S.சித்திரவேல் ஐயா அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர் (நெல்) தினேஸ்காந் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான T.கணேசன், S.கருணாகரன் ஆகியோரும் அதிதி களாகக் கலந்து கொண்டனர்.

மேலும் விவசாயப் போதனிரியர்களான C. L. செந்தீபன், சிறிக்கண்ணன், முர்ஷிதா செரின் ஆகியோரும், தொழிநுட்ப உதவியாளர் களான அ.அனோஜன், T.தானிஸ், ஹப்ரின் முகமட் ஆகியோரும், விவசாயிகள், விவசாய அமைப்பினர், கள உதவியாளர்கள், திணைக்கள தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







No comments: