இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான இருப்பு பொருட்களின் கணக்கெடுப்பின் பின்னரான பகிரங்க ஏல விற்பனை இன்று (22) மாவட்ட செயலகத்திலே இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள், பழைய பொருட்கள் கொள்வனவு செய்வோர் வருகைதந்து பொருட்களுக்கான விலையினை ஏலம் வைத்து பணத்தினை செலுத்தி பொருட்களை எடுத்துச் சென்றனர்.
இவ் ஏல விற்பனையானது கணக்கெடுப்பு சபைத் தலைவர், மாவட்ட செயலக கணக்காளர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments: