News Just In

11/26/2020 08:02:00 AM

ஒன்லைன் முறையில் முதன்முறையாக கோப் குழு இன்று கூடுகிறது!!


கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று (26) கூடவுள்ளது.

இந்தக் கூட்டம் முதற்தடவையாக ஒன்லைன் முறையில் நடத்தப்படும். களனி கங்கை நீர் மாசவடைவது பற்றிப் பேசுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமை பயன்படுத்தப்படுகிறது.

No comments: