News Just In

10/26/2020 10:45:00 AM

அரிசி மற்றும் முகக்கவசங்களை அதிக விலையில் விற்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!


ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக் கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுவதாகவும்,  இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: