News Just In

8/10/2020 08:24:00 PM

9 வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி..!


9 வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமர்வு ஆரம்பமாகும் நேரத்தை குறிப்பிட்டு இந்த வாரத்தில் வர்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கன்னி அமர்வு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இடம்பெறவுள்ளதால் அதனை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் விசேட அதிதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்பை பேணியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இம்முறை நாடாளுமன்றத்திற்கு 76 உறுப்பினர்கள் புதிதாக தெரிவுசெய்யப்பட்டள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும் போது இந்த முறை அதிகளவான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

எனினும், கடந்த நாடாளுமன்றத்தில் 13 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் இந்த முறை பெண் நாடாளுமன்ற உறுப்பினர் 10 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 3 நாட்கள் பயிற்சி நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இடம்பெறும் அதேவாரத்தில் இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

No comments: