6 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (ஜுன் 21) அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழக மாணவர்கள் இரண்டு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெங்கல பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அனுசரணையில் கொழும்பு அஸ்டாங்க யோக மந்தீர் ஏற்பாட்டில் தேசியரீதியில் இணையத்தள (Online Yoga Championship) வழியான யோகாசனப் போட்டி இவ்வாண்டு இடம்பெற்றது.
போட்டி நிகழ்ச்சியில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலுமிலிருந்து சுமார் 39 யோகா நிறுவனங்களின் சார்பாக பல்வேறு வயதுப் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 477 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டியில் கலாபூசணம் செல்லையா துரையப்பா அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் 36 பேர் பங்குபற்றி 17 பேர் இறுதி சுற்றுக்கு தெரிவானார்கள். இப்போட்டிகளுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச நடுவர்கள் நடுவனம் புரிந்தனர்.
இறுதிச்சுற்றில் ஆண்களுக்கான (14 – 20) வயது பிரிவில் வெண்கலப்பதக்கமும்,(21-27) மற்றும் (35-41) வயதுப்பிரிவு முறையே இரு வெங்கல பதக்கங்களையும் வென்று அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: