(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர், முதியோர் இல்லங்கள் போன்ற பராமரிப்பு இடங்களிலுள்ளோருக்காக உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பில் இயங்கிவரும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக சுமார் 2இலட்சத்து 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இயங்கிவரும் அல்பஜ்ர் நலன்புரி அமைப்பு வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் இன்று (01.05.2020) மாவட்ட செயலகத்தில் வைத்து உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் மண்முனைவடக்கு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்கள் 250 இற்கும், உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், அல்பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுல்றஹுமான், செயலாளர், எம்.ஐ.எம். கமால்தீன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உட்பட பராமரிப்பு இல்லங்களின் பிரதிநிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
5/02/2020 08:40:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பில் பராமரிப்பு இல்லங்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கிவைப்பு
மட்டக்களப்பில் பராமரிப்பு இல்லங்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: