News Just In

5/01/2020 10:49:00 PM

வேலையில்லா பட்டதாரிகளுக்கான 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்


வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நிறைவடையும் வரையில் நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments: