தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதேவேளை உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments: