News Just In

1/19/2022 11:09:00 AM

மட்டக்களப்பில் வயல் வெளியில் மீட்கப்பட்ட சடலம்!


மட்டக்களப்பில் வயல்வெளியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாவற்காடு, மாவடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 76 வயதுடைய தம்பியப்பா சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் வாடியமைத்து அங்கிருந்து தனது வயல் மற்றும் மாடுகளை நீண்டகாலமாக பராமரித்து வருவதாகவும் இடையிடையே தனது வதிவிடத்திற்கு சென்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று உறவினர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்றவேளை வாடிக்கு அருகில் உள்ள வயல் பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்தாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: