ஊடக மாநாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்படும் சரியான திகதி அறிவிக்கப்படுமெனஅரசாங்க பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற இறுதி அமர்வு நாளை முதல் 20 ஆம் தகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் நான்கரை வருட காலத்தின் பின்னர் அதனை ஜனாதிபதியினால் கலைக்க முடியும். இதன்படி எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்த அவர்
பாராளுமன்றம் கலைக்கப்படும் சரியான திகதி நாளை (18) இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டிலேயே அறிவிக்கப்படுமெனவும், இறுதித் திகதி இதுவரை முடிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
2/17/2020 09:43:00 AM
பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: