விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்.வருகை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார்.
இன்றையதிம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக வருகைதந்த தொல்.திருமாவளவை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளை (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக தொல்.திருமாவளவன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தொல்.திருமாவளவன் இன்றையதினம் முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி செலுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது
11/13/2025 06:03:00 PM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்.வருகை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: