News Just In

10/06/2025 08:58:00 PM

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்


இலங்கை தீர்மானம் இன்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வெற்றியளிக்கும் வகையிவ் பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதான நிறைவேற்றுமாறு இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரித்தானியா விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாக்கெடுப்பு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரேரணையை சமர்ப்பித்த பிரித்தானிய பிரதிநிதி தனது உரையின் ஆரம்பத்தில் அண்மையில் லண்டனில் காலமான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் திருமலை படுகொலையில் தனது புதல்வனை இழந்த அவருக்கு நீதி வழங்கப்படாத நிலையில் இந்த மரணம் இடம்பெற்ற துன்பியலை நினைவூட்டினார்.

No comments: