News Just In

9/24/2025 06:59:00 PM

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும் !

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும் !


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

சுகாதார நெறிமுறைகள் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள், தரமற்ற மற்றும் மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள், உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு பகுதிகளில் காணப்பட்ட சுகாதாரமின்மை இதன்போது கண்டறியப்பட்டது.

இக்குறைபாடுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திடீர் சோதனைகள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் உணவகங்களில் பொதுமக்கள் உணவருந்தும் போது அங்குள்ள சுகாதார நிலையை கவனிக்க வேண்டும் எனக் கூறியதோடு சுகாதார குறைபாடுகள் எதுவும் கண்டால் உடனடியாக சுகாதார பிரிவுக்கு தகவல் தர வேண்டும் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

No comments: