News Just In

9/17/2025 02:32:00 PM

தலைமறைவான சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்


தலைமறைவான சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்



பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினம் மித்தெனிய பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரி , தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அ நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையில் இன்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: