
கரூர் த.வெ.க செயலாளர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் நேற்று (செப் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் மீது கரூர் டவுன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலுசாமிபுரத்தில் நடந்த பிரச்சார நிகழ்வின் போது விதிமுறைகளை மீறியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இதுவரை மதியழகன் பெயரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
83 பேர் காயமடைந்த இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
No comments: