News Just In

8/16/2022 08:08:00 PM

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்!

3,120 மெற்றிக் தொன் எரிவாயுயை ஏற்றி வந்த கப்பல் ஒன்றே இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் வகையில் மொத்த சந்தைக்கு எரிவாயு வெளியிடப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனாவின் ஆய்வுக் கப்பலான யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளம குறிப்பிடத்தக்கது.

No comments: